யாழ். மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி எதிர்வரும் ஜுலை 3ஆம் திகதி படையினரால் விடுவிக்கப்படும் என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலிட்டி பிரதேசத்தில் 50 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.
இந்த காணி அப்பிரதேச அரசாங்க அதிபரிடம் இராணுவத்தினரால் அன்றையதினம் கையளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 51 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் மீளக்குடியமரக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.