Wednesday , June 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பலாலி விமான நிலை­யத்­தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்!

பலாலி விமான நிலை­யத்­தில் இருந்து ஒக்டோபர் முதல் விமானசேவைகள்!

யாழ்ப்­பா­ணம், பலாலி சர்வதேச விமான நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் விமான சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள்­கள் பய­ண­மாக யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்­தி­ருந்­த நிலையில், மூன்­றாம் நாளான நேற்று அவர் பலாலி விமான நிலை­யத்­துக்­கும் சென்­றி­ருந்­தார்.

இதன்போது அவருடன் விமான போக்­கு­வ­ரத்து அமைச்­சர் அர்­ஜூன ரண­துங்க, இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், மற்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் சென்­றிருந்த­னர்.

இதை­ய­டுத்து அங்கு இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே பலா­லி­ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து,oக்டோபர் முதல் விமான சேவை­கள் ஆரம்­ப­மா­கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

அத்துடன் இதற்கான அலுவலக வேலைகள் செப்ரெம்பர் முதல் இடம்பெறும் எனவும் மேலும் தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv