யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள்கள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று அவர் பலாலி விமான நிலையத்துக்கும் சென்றிருந்தார்.
இதன்போது அவருடன் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சென்றிருந்தனர்.
இதையடுத்து அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து,oக்டோபர் முதல் விமான சேவைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான அலுவலக வேலைகள் செப்ரெம்பர் முதல் இடம்பெறும் எனவும் மேலும் தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.