Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கைத்­தொ­ழில் மீளமைக்கத்திட்டம்

கைத்­தொ­ழில் மீளமைக்கத்திட்டம்

வடக்கு மாகா­ணத்­தில் இயங்கிவரும் கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்­தல் தொடர்­பாக வடக்கு மாகா­ண­ச­பை­யின் அபிப்­பி­ரா­யம் பெற்­றுக் கொள்­வ­தற்­காக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்­வில் சமர்ப்­பிக்­க­வுள்­ளார் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
கைத்­தொ­ழில் பேட்­டை­கள் மற்­றும் உப்­ப­ளங்­களை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்­தல் தொடர்­பாக கொழும்பு அரசு, மாகாண சபை­யி­டம் அபிப்­பி­ரா­யம் வின­வி­யுள்­ள­தால் அது தொடர்­பான அபிப்­பி­ரா­யத்தை மாகாண சபை­யி­ன­ரி­டம் கேட்­கும் வகை­யில் அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்­ளார்.

இதே­வேளை வடக்கு மாகா­ணத்­தில் உள்ள கைத்­தொ­ழில் பேட்­டை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் தடை­யாக இருக்­கின்­ற­னர் என கொழும்பு கைத்­தொ­ழில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் நாடா­ளு­மன்­றில் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

மேலும் மீள இயங்க வைப்­பது தொடர்­பில் வடக்கு மாகாண முதல்­வ­ருக்கு கடி­தங்­கள் அனுப்­பி­யி­ருந்த போதி­லும் அவர் அதற்­கான பதிலை வழங்­க­வில்லை என்­றும் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த வேளை அமைச்­சர் பகி­ரங்­க­மாக குற்­றச்­சாட்­டுக் களை முன்­வைத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …