Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாட்டின் பொருளாதாரம் தெளிவான வளர்ச்சியில் : மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் பொருளாதாரம் தெளிவான வளர்ச்சியில் : மத்திய வங்கியின் ஆளுநர்

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் தெளிவான வளர்ச்சியை எட்டியுள்ளது – இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

கொழும்ரில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

~~நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை வழங்குவது இலக்காகும்.

கடன் பெறுவதை இலகுவாக்குமாறு உரிய தரப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நுண்கடன் மற்றும் சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கும் முறைமையை ஊக்குவிக்குமாறும் மத்திய வங்கி வலியுத்தப்பட்டுள்ளது|| – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …