Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.!

யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு : இருவர் கைது.!

யாழ். பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக குடு வகை போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை பிராந்திய பொலிஸ்மா அதிபரின் கீழான போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்றைய தினம் நண்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து குறித்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 குடு பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவற்றின் மொத்த நிறை 2.5 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் 35 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் அவர்களிடமிருந்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …