சமூக வலைத்தளமான முகநூலில் #metoo என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
பாலியல் தொல்லைகள் மற்றும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் #metoo என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பதிவு செய்துவருகின்றனர்.
இந்நிலையில், தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை கஸ்தூரி தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியுள்ளதாக பதிவிட்டதுடன், இத்தகைய பாலியல் சீண்டல்களை தடுக்க ஆக்கபூர்வமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.