Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கள்­ள­நோட்­டுக்­கள் விநி­யோ­கித்து வணி­கர்­களை ஏமாற்றிய கும்­பல்!

கள்­ள­நோட்­டுக்­கள் விநி­யோ­கித்து வணி­கர்­களை ஏமாற்றிய கும்­பல்!

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேசத் தில் சந்­தைத்­தொ­குதி மற்­றும் உண­வ­கங்­க­ளில் கும்­பல் ஒன்று கள்­ள­நோட்­டுக்­களை கொடுத்து வணி­கர்­களை ஏமாற்­றி­யுள்­ளது.

புதுக்­கு­டி­யி­ருப்­புச் சந்­தைப்­ப­கு­தி­யில் நேற்று நண்­ப­கல் தூள்­வி­யா­பா­ரம் செய்­யும் வயோ­தி­பப் பெண் ஒரு­வ­ரி­ட­மும், மட்­பாண்­டங்­கள் வியா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும், பழ­வி­யா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும் இந்­த மோசடி கும்­பல் ஆயி­ரம் ரூபா தாள்­களைக் கொடுத்து சிறு­தொ­கை­யில் பொருள்­களை கொள்­வ­னவு செய்து மீதிப்­ப­ணத்தை பெற்­றுக்­கொண்­டது.

அத்­து­டன் புட­வை­க் க­டை­ கள் மற்­றும் பான்­சி­க­டை­க­ளி­லும் இதே வித­மாக பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்­தது குழு.

இதே­வேளை புதுக்­கு­டி­யி­ருப்­புச் சந்­திப்­ப­கு­தி­யில் உள்ள உண­வ­கம் ஒன்­றி­லும் இதே சம்பவம் நேற்று இன்று இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தில் அச்­சி­டப்­பட்ட கள்­ள­ நோட்­டுக்­கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­கும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளதா என்ற கேள்­வி­யில் மக்­கள் அச்­ச­ம­டைந்­துள்­ளார்­கள். இந்­தக் கும்­பல் தொடர்­பில் புதுக்­கு­டி­ யி­ருப்பு வணி­கர் சங்­கத் தலை­வர் சந்­தி­ரன் பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …