ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றவே கால அவகாசம் – கஜேந்திரகுமார்
சுமந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் எனக் கோருவது அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி கோருகின்ற நோக்கத்தோடு, முன்வைக்கின்ற கருத்தாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 7 ஆவது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பிலான கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை அவசியம் என்றும் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




