இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு
பாகிஸ்தானில் சிக்கியுள்ள 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது. இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகர் நோக்கி பயணித்துள்ளது.
குறித்த விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 17 அலுவலகர்கள் காணப்படுவதாகவும் இன்று இரவு 7.45 மணியளவில் குறித்த விமானம் பாகிஸ்தானிலிருந்து மாணவர்களுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.