தமிழ் சினிமாவில் இன்று வரை வடிவேலு என்ற காமெடி நடிகருக்கு மாற்றே இல்லை.
அந்த அளவிற்கு அவரின் ஆதிக்கம் அவர் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இருந்துக்கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில் இவருடன் பல படங்களில் நடித்த தாடி பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் வடிவேலு முன்பு போல் இல்லை.
அவர் எப்போதும் ஒரு காட்சி நடித்து முடித்துவிட்டால் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்.
ஆனால், தற்போதெல்லாம் ஒன்றுக்கு இரண்டு முறை அந்த காட்சியை பார்க்கின்றார், அவருக்கு காமெடி ஒர்க்-அவுட் ஆகியுள்ளதா? என்ற சந்தேகம் வருகின்றது.
வடிவேலுவிற்கு தன் காமெடி மேல் பயம் வந்துவிட்டது என்று சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.