தரம் 13 வரை சகல மாணவர்களுக்கும் கட்டாயக்கல்வி – எரான் விக்ரமரட்ன
நாட்டின் அனைத்து மாணவர்களும் தரம் 13 வரையில் கல்வி பயிலக்கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலைகளில் 13 ஆண்டுகள் மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், தரம் எட்டு அல்லது சாதாரண தரத்துடன் அதிகளவான மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகிச் செல்கின்றனர்.
அத்துடன் இவ்வாறானவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுவதாகவும் தெரிவித்த அவர் தகுந்த கல்வியினைக் கற்பதன் மூலம் தொழில்சார் தகுதிகளை அடைபவர்கள் சிறந்த ஊதியம் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




