வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு
ஸ்ரீலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் என தலைப்பிடப்பட்டு இந்த வரைப்புத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மொண்டிநீக்ரோ, மசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த தீர்மானத்திற்கு பிரதானமாக அனுரணை வழங்கும் நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமானது ஸ்ரீலங்கா விடயத்தில் தனது பரிந்துரைகள் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய ஏனைய செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக அவதானிக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காத்திரமான எழுத்துமூல அறிக்கையை வரவேற்பதாகவும் குறித்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னதாக வரைபுத் தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதில் திருத்தங்களை செய்ய வேண்டுமாயின், 21 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.




