Wednesday , June 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற தினேஷ் தலைமையில் திட்டமிடல் குழு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற பொது எதிரணி புதிய திட்டமிடல் குழுவொன்றை நியமித்துள்ளது.

பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன தலைமையிலான திட்டமிடல் குழுவொன்றே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கெதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற ஆதரவு திரட்டுவதற்காக கூட்டு எதிர்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புடன் பேச்சுகளை நடத்தவுள்ளனர்.

கூட்டு எதிர்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள குறித்த பிரேரணையில் பிரதமருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கடந்த 6ஆம் திகதி நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருந்த நிலையில், பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமையின் காரணமாக குறித்த பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …