Wednesday , February 5 2025
Home / சினிமா செய்திகள் / ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசை

ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க ஆசை

ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டு‌ம் எனும் ஆசை தனக்கு இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் அடுத்தாண்டுதான் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 60 சதவீத‌ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்‌.

மேலும், ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டு‌ம் எனும் ஆசையையும் தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார். காலாவிற்கு முன்பாக ஷங்கர், ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 திரைக்கு வரவுள்ளது.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …