2016 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை (28) வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் நாளை பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்புகுமார குறிப்பிட்டார்.
2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக சுமார் ஏழு இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.