நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை நகரத்திலும், அதனை அண்மித்த பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன.
பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணியின் போது, கொட்டகலை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டதுடன், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டன. இதன்போது, டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இனங்காணப்பட்டு அவை அழிக்கப்பட்டன.
இச்சிரமதானப் பணிகளுக்கு நுவரெலியா பிரதேச சபையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.