இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு
நாட்டில் இன்று (24.04.2020) மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை 373 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 259 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 107 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயனுள்ள இணைப்புகள் இங்கே




