வடக்கு, கிழக்கில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும், இந்தப் போராட்டத்தை அரசு கண்டுகொள்வதாக இல்லை.
எனவே, அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், எமது உறவுகளின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் நாளை வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல பொது அமைப்புக்களும், வர்த்தகர்களும் மற்றும் ஏனைய தரப்பினரும் தமது முழுமையான ஆதரவை வழங்கவேண்டும்” – என்றார்.