ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி போதே நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாவது தலைவர் S. W. R. D பண்டாரநாயக்க இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையை வலியுறுத்திய நிலையில் அதனை அக்கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.