மக்களுக்கான சிறந்த சேவை நீதிபதிகளின் தரத்திலேயே உள்ளது: பிரதம நீதியரசர்
மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்கு நீதிபதிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என பிரதம Def Justice piriyacatன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
புதிய பிரதம நீதியரசர் உச்ச நீதிமன்றில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ளும் நிகழ்விலேயே மேற்படி கூறியுள்ளார்.
மேலும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது நீதிமன்றின் பிரதான கடமையாகும் என்பதுடன் சட்டத்தில் வழியில் எனது அர்ப்பணிப்புடனான சேவைகளை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதவான்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
அண்மையில் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அவர்கள் ஓய்வுபெற்றதையடுத்து புதிய நீதியரசராக பிரியசாத் டெப் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இவர் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் 45ஆவது பிரதம நீதியரசர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




