பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஜூலி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு குறித்து செவிலியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தானும் ஒரு செவிலியர் என்ற முறையில் ஜுலி போராட்ட களத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பேசிய அவர், சாதாரணமாக கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினமும் 500 ரூபாய் கிடைக்கிறது, ஆனால் ஒப்பந்த அடிப்படையில் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கிறது. ஒரு சராசரியான மனிதனுக்கு இந்த ஊதியம் மிகவும் குறைவு என கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் ஜுலியை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லை, இவர் அணிந்து சென்ற உடை காரணமாகதான் அனுமதிக்கப்பட வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது சேவையில் ஈடுப்படுவதாக கூறி தற்போது அடிக்கடி ஜூலி சர்ச்சையில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.