Sunday , June 22 2025
Home / தமிழ்மாறன் (page 108)

தமிழ்மாறன்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும்

காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி விரைந்து செயற்பட வேண்டும் போர்க்குற்ற விசாரணை மற்றும் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகள் தொடர்பில், காலத்தை வீணடிக்காமல் நல்லாட்சி அரசு உடனடியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா …

Read More »

வில்பத்துக்கு வடக்கே உள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் : ஜனாதிபதி கையொப்பம்

வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 04 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் …

Read More »

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா கவலையடைந்திருந்தாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதே, எமது நோக்கம். இதனை கட்டாயப்படுத்தி அல்லது, நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு என இரண்டு வழிகளில் அடைய முடியும். இந்தப் பிரச்சினை எழுந்து கொண்டிருக்கும் போது, ஒருமித்த நிலையை …

Read More »

கால அவகாசம்; ஸ்ரீலங்காவை பாதுகாப்பதற்காகவே- சுரேஸ்

ஐக்கிய நாடுகள் சபை 2 வருட கால அவகாசத்தைக் கொடுத்திருப்பது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக தமிழரசுக் கட்சி எதனைச் சாதிக்கப் போகின்றது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஜெனீவா அமர்வு குறித்த …

Read More »

தமிழர்களின் வேதனைகளுக்கு விரைவில் ஒரு முடிவு வேண்டும்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச சமூகம் என்பன முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை …

Read More »

இராணுவத்தை விசாரணை செய்ய ஒருபோதும் அனுமதியோம்

இராணுவத்தினரை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை என்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். எங்கள் முடிவில் தெளிவாக இருகக்கின்றோம். எமது நீதித்துறை எமக்கு போதுமானது. இந்த நாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை …

Read More »

இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்

இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம்

இலங்கைக்கு கால அவகாசம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது புதிய தீர்மானம் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் புதிய தீர்மானம் 36 நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேறியதாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட புதிய தீர்மானமே மேற்படி வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று …

Read More »

மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு

மத அச்சுறுத்தல்கள்

மத அச்சுறுத்தல்கள் தொடர்கிறது ; கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு சிறுபான்மையினரின் மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிழக்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வரும் வேலையில்லாப் பட்டதாரிகளை விரைவில் கிழக்கின் …

Read More »

இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்

இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் மீது முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்கம் ஜக்கிய நாடுகள் சபையில் கோருவது போல இரண்டு வருட காலஅவகாசத்தை வழங்கி எமது இலக்கை நோக்கி பயணிக்க முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா …

Read More »

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தையும், சர்வதேச நீதிபதிகளையும் சு.க. நிராகரிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் அரசின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டுக்குப் பாதகமாக …

Read More »