உண்மைகளை வெளியிடப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை
தேசிய அரசினதும் ஜாதிக ஹெல உறுமயவினதும் இதுவரை வெளிவராத பல்வேறு உண்மைகளை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளவருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய அரசின் செயற்பாடுகளால் மங்களின் மனங்களை வெல்ல முடியாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
குறிப்பாக அரசு முன்னெடுத்துவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாத வகையில் அழிவுகளை நோக்கி நல்லாட்சி அரசு பயணிப்பதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக மௌனமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரர், ஜாதிக ஹெல உறுமய தன் மீது பாரிய விமர்சனங்களை முன்வைப்பதாக கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஜாதிக ஹெல உறுமய தொடர்பிலும், தேசிய அரசு தொடர்பிலும் விரைவில் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




