மன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்
மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி எழுத்தூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) மன்னாரில் இருந்து எழுத்தூரை நோக்கி பயணித்த லொறியும், தாழ்வுபாடு பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




