தடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து செயல்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் பல தனியாகவும், ஒன்றாகவும் இணைந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால், அமெரிக்கா, இதர நாடுகளுடன் இணைந்து, தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து, சந்தைப்படுத்த விருப்பமில்லை என, தெரிவித்துள்ளது. குறிப்பாக, பல நாடுகள் அங்கம் வகிக்கும், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படாமல், தனித்து இயங்கப் போவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.