இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தமையினால் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பதனை கண்டறியும் பொருட்டு பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்வரும் சித்திரை புத்தாண்டு நிகழ்வுக்காக தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையர்கள் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறியும் பொருட்டு, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி அவதானிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 17 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 655 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா சந்தேகத்தில் அங்கொடைக்கு அனுப்பப்பட்ட இருவர் – வெளியான தகவல்!
-
அண்மைய செய்தி – பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 பேர் பாதிப்பு…!
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
பயனுள்ள இணைப்புகள் இங்கே




