முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்த நடவடிக்கையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரிடம் அனுமதி பெற்ற பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரிம் குறித்த யோசனையைச் சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.