Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி

சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி

சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி

சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்திருக்கிறார்.

சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைப்பது குறித்து ஆளுநர் வித்யாசாக ராவ் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கியிடன் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனை, முகுல் ரோஹட்கி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னிடம் எவ்வித சட்ட ஆலோசனையும் பெறவில்லை. அதேவேளையில், சசிகலா முதல்வராக வேண்டும் என அவரது கட்சியினர் கூடி முடிவு எடுத்துள்ளனர். சசிகலா முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை” என்றார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் 3 பேர் பலி – 143 பேர் பாதிப்பு சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய …