செப். 22ல் ரசிகர்களுக்காக ஓவியா என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தவர் ஓவியா. பிக் பாஸ் பரபரப்புக்கு பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் போலீஸ் ராஜ்யம்.

பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.

தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் ராஜ்யம் ரீலீசாகிறது.

ஓவியாவின் மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு பிரிமியர் ஷோவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஓவியா கலந்து கொள்ள இருக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் தயாராகியுள்ள போலீஸ் ராஜ்யம் செப்டம்பர் 22 அன்று தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *