Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / 148 மில்லியன் ரூபா கிடைத்தால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிக்கப்படும்

148 மில்லியன் ரூபா கிடைத்தால் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு வில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏக்கர் காணி விரையில் விடுவிக்கப்பட இருப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளை வேறு இடத்தில் அமைப்பதற்கு புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் ரி.என்.சுவாமிநாதன் வழங்குவதாக கூறிய 148 மில்லியன் ரூபா கிடைத்தபின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாகவும் அவர் இன்று கூறினார்.

இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரியவர்களிடம் வழங்குவது தொடர்பில் செய்தியாளர் கேட்டபோதே இவ்வாறு கூறினார். குறிப்பிட்ட நிதி கிடைத்தபின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் வேறிடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பணிகள் பூர்த்தியானதும் இப்பிரதேசத்திலுள்ள 111 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …