மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவன் மரணம்-(படம்)




(20-11-2017)
மன்னார் முருங்கன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் மின்னல் தாக்கிய 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
-உயிரிழந்த சிறுவன் செட்டடியார் மகன் கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் வயது(11) என தெரிய வந்துள்ளது.
-குறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் வயலில் வேளை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு , வீட்டில் இருந்து மதிய உணவை கொண்டு சென்ற போதே வயல் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
-உடனடியாக குறித்த சிறுவனின் சடலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
-மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதத்க்கது.