Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேர்தலை பிற்போடுவது கிழக்கின் சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிடும்: பசீர் சேகுதாவூத்

தேர்தலை பிற்போடுவது கிழக்கின் சிறுபான்மையினருக்கு சாதகமாகிவிடும்: பசீர் சேகுதாவூத்

கிழக்கு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பதானது, பெரும்பாண்மை சமூகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒத்திவைக்கப்படும் காலங்களில் அதன் ஆட்சி சிங்களவர்களின் கைகளுக்குச் செல்வதால், அவர்கள் நினைத்ததை அக் காலப்பகுதிக்குள் நிறைவேற்றிக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கான தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதென அண்மைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘கிழக்கு மாகாண சபை கலைந்ததும், அதிகாரிகளுக்கு மேலதிகமாக சபையில் அரசியல் ரீதியாக அதிகாரம் பொருந்திய ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும், சபைத் தவிசாளர் கலப்பதியும் மாத்திரமே எஞ்சுவர்.

மாகாண சபைகள் சட்டத்துக்கு அமைவாக சபையொன்றின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் பதவிகள், சபை கலைந்தவுடன் காலாவதியாகும். அடுத்த தேர்தல் முடிந்து, புதிய சபை பதவியேற்கும் வரை தவிசாளர் பதவி தொடரும்.

எனவே, கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு பெரும்பாண்மை சமூகத்தை சோ்ந்தவா்களிடம் அதிகாரம் நிலைத்து நிற்கும். ஆதலால், கிழக்கின் அதிகாரம் முழுமையாக அடுத்த தேர்தல் வரை, கிழக்கு சிறுபான்மை சமூகமான சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும். அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள்.

ஆளுநர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். தவிசாளர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பதால் இரு பிரதான கட்சிகளே நன்மையடையும். இவ்வாறு ஒத்திவைக்கப்படும் காலத்தில், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே இடம்பெறும்.

இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும், முஸ்லிம் தேசிய அரசியல் சக்தியும் யுத்தம் நிறைவுற்ற பின்னர் மேற்குலக ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …