எவன்கார்ட், ரக்னா லங்கா பாதுகாப்புச் சேவைகள், மிக் விமானக் கொள்னவு உள்ளிட்ட விடயங்களில் சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை நிஷரூபணம் செய்ய முடியாது போனமையால் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புப்படுத்தி தன்னை கைதுசெய்ய அரசு சதித்திட்டம் தீட்டுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது,
கடந்த காலத்தில் எவன்கார்ட் விவகாரம், ரக்னா லங்கா பாதுகாப்பு சேவைகள், விமானப் படைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு, டி.ஏ. ராஜபக்ஷ அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு விடங்களை தொடர்புப்படுத்தி தனது கௌரவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயன்ற அரசு தற்போது, லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புப்படுத்தியாவது என்னை கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த வாரம் வலையதளமொன்றில், லசந்த விக்ரமத்துங்க கொலையுடன் தொடர்புப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் முன்னாள் இராணுவப் புலாய்வுத்துறைக்கும் தொடர்புள்ளது. இராணுவக் குழுவொனறு இந்தக் கொலையுடன் தொடர்புப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மேஜர் ஜெனரால் கபில ஹேந்தவிதாரனவே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டார் என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்தாக குறித்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களை ஏமாற்றும் ஒரு சதித்திட்டமே இது. உண்மைத் தகவல்களை மூடி மறைக்க கையாளும் யுத்திகளாகும். குறித்த காலப்பகுதியில் மேஜர் ஜெனரால் கபில ஹேந்தவிதார இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார் என்பதுடன், அவர் பாதுகாப்பு அமைச்சின் புனலாய்வு சேவையின் பிரதானியாக கடமையாற்றியிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவர் வகித்த பதவி ஒரு சிவிலியர் பதவியாகும். இராணுவத்தினர் குழுக்கள் ஏதும் அவரின் கட்டுப்பாட்டிலும்; இருக்கவில்லை.
அரசியல் காரணிகளுக்காக பொலிஸ் பலத்தை பயன்படுத்தி மக்களை திசைத்திருப்ப முற்படுகின்றனர். சட்டத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளால் உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் எமது நாட்டின் சட்டத்தின் மீது அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. சட்டங்கள் செயலிழந்த நாடாக மாற்ற முற்படுபவர்களுக்கும,; அநியாயத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சியடைவதே இறுதி தீர்ப்பு. உலகில் இவ்வாறு செயலிழந்த அரசுகளை இறுதியில் மக்கள் போராட்டத்தின் மூலமே விரடியடித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.