சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கும் தமது அன்புக்குரியவர்களை தேடுபவர்களுக்கு ஒரு முன்னோக்கிய படியாகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள அவர், சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது இலங்கை மக்களின் சமாதானம்இ நல்லிணக்கம்இ பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பனவற்றுக்கும்இ விசேடமாக தமது அன்புக்குரியவர்களை தேடுபவர்களுக்கும் ஒரு முன்னோக்கிய படியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் பணியகத்திற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி நேற்று நியமித்திருந்தார். பணியகத்தின் தலைவராக சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.