Monday , June 30 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி

கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டனி
தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சார்பில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை(15) காலை 11 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றான சனநாயக தமிழரசு கட்சியின்  செயலாளர் வி. எஸ் .சிவகரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
-மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,மாந்தை மோற்கு பிரதேச சபை நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
-இதன் போது ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் மெரினஸ் பேரேரா உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …