Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா தற்கொலையா?

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா தற்கொலையா?

கிளிநொச்சி – புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து குறித்த இளைஞரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv