அறிவால் பெண்கள் சாதிக்க முடியும்: கனிமொழி பேச்சு
திருச்சி, புனித வளனார் கல்லூரி மற்றும் புனித வளனார் மேலாண்மை நிறுவனம் சார்பில் பெண்கள் தின விழாவில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
அறிவு என்று வருகையில் பெண்கள் யாருக்கும் எந்த இடத்திலும் சளைத்தவர்கள் கிடையாது. இந்த அறிவு என்ற ஆயுதத்தை வைத்து நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். உங்கள் கனவுகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
உங்கள் கனவுகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். அதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். அதை அடையும் வழிமுறைகள் குறித்து நீங்கள் பேசலாம், விவாதிக்கலாம். வேறு வழிமுறைகளை கண்டறியலாம். ஆனால் உங்கள் கனவுகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.




