Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்த அணியின் எச்சரிக்கை

மஹிந்த அணியின் எச்சரிக்கை

நாட்டை நேசிப்பவர்கள் வரவு செலவுத்திட்டத்தினை எதிர்க்க வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினர் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு துணை போகின்றவர்களே, இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv