பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீது அவர்களுக்கே உறுதியற்ற நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசும் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்;கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
”பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியே முதலில் கோரியது. ஆனால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த கூட்டு எதிர்க்கட்சியோ, புதுவருடத்தின் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
இதன்மூலம், அவர்களுக்கே அவர்கள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது உறுதியற்ற நிலை காணப்படுகின்றமை புலப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி தேல்வியடையச் செய்யும். மேலும், பிரதமரையும் நல்லாட்சியையும் வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடுவோம்” என்றார்.