அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி அதிபர் டிரம்ப் மீது செனட் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி. பிராட் ஷெர்மன் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் மீது கண்டன தீர்மானம் ஒன்றை பிரதிநிதிகள் சபையில் அவர் தாக்கல் செய்தார். ரஷியாவின் தலையீடு குறித்த விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் டிரம்ப், உயர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது முறையற்ற செயல் எனவும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முதல் கண்டன தீர்மானத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான அல் கிரீனும் கையெழுத்து போட்டுள்ளார்.
ஆனால் இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என தெரிகிறது. ஏனெனில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சியே அதிக மெஜாரிட்டி உறுப்பினர்களை கொண்டுள்ளது. பிராட் ஷெர்மனின் இந்த குற்றச்சாட்டு ஒரு முட்டாள்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட மோசமான செயல் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ் கூறியுள்ளார்.