இராணுவ மூலாபோயத்தின் ஓர் அங்கமாகவே சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க இராணுவத் தலைமைகமான பென்டகன் அறிக்கையிட்டுள்ளது .
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு முன் னேற்றங்கள் தொடர்பாக பென்ரகன் சமர்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள் ளது.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது
கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது.
பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கத்தை இது கொண்டுள்ளது. இந்தத் திட்டங்களால் சீனாவின் மூலதனத்தைச் சார்ந்திருக்கும் நிலை இந்த நாடுகளுக்கு ஏற்படுத்தப்படக்கூடும்.
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் இதற்கு உதாரணம். கடனுக்குப் பதிலாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீன அரசு குத்தகைக்குப் பெற்றுள்ளது– என்றுள்ளது.