Monday , June 9 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நேரம் வந்துவிட்டது – நாமல் அறிவிப்பு

நேரம் வந்துவிட்டது – நாமல் அறிவிப்பு

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் வெற்றிப் பெறுமா, அல்லது தோல்வியடையுமா என்பதை குறிப்பிட முடியாது.

ஆனால் மக்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளவர்களும், பொருத்தமற்ற அரசாங்கமும் பயனற்றது மக்களின் தரப்பில் இருந்து இவ்விரு நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்குவது எமது கடமையாகும் .

பல அரசியல் தேவைகளை காரணம் காட்டி தவறென்று தெரிந்தும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்க எதிராக மக்கள் செயற்படுவார்கள் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv