தேசிய தலைவருக்கு எதிராக கருணாவுடன் இணைந்து செயல்பட்ட பிரபலம் என்று எழுதப்பட்ட கட்டுரை குறித்து சில உண்மைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
அந்த கட்டுரையில் 2004,ம் ஆண்டு விடுதலைப்புலிகளை பற்றி கருணாவுக்கு ஆதரவாக நான் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரசாரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள் அதில் மாற்றமில்லை உண்மை…
கருணா என்னை 2004,ம் ஆண்டு வேட்பாளராக நியமித்ததாக குறிப்பிட்டுள்ளது 2004,ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவு தேர்தல் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் வரை விடுதலைப்புலிகளுக்கும் கருணாவுக்கும் பிளவுகள் ஏற்பட வில்லை என்பது உலகறிந்த உண்மை ஆனால் அதற்கு முன்னர் பிளவு ஆரம்பமாகி விட்டது எனக்கு தெரியும் இதை எனக்கு கூறியவர் கருணாவின் வலது கரமாக செயற்பட்ட கருணாவின் இராணுவத் தளபதியாக இருந்த ராபட்.
அப்போது மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக இருந்தவர் கருணா என்பது உண்மை ஆனால் என்னை வேட்பாளராக கருணா தெரிவுசெய்யவில்லை.
கருணா வேட்பாளராக போட்டியிடுமாறும் கேட்கவில்லை என்னை வேட்பாளராக போட்டியிடுமாறு கூறியது அப்போது அரசியல் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் மற்றும் தளபதி ராபட் என்பவர்களே நேரடியாக என்னுடன் கதைத்தார்.
தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்து சரியா ஒரு வாரம் கழித்துத்தான் விடுதலைப் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையில் வெளிப்படையான பிளவு ஏற்பட்டது.
அதன்பின் கருணாகுழுவினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல கூட்டங்களையும் தேவையற்ற பிரச்சாரங்களையும் செய்த போது நான் கருணாகுழுவுக்கு ஆதரவாக எந்த ஒருகூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
மாறாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக எவ்வாறு பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம் எனும் திட்டங்களை அக்காலப் பகுதியில் அரசியல் பொறுப்பாளராக இருந்த கரிகாலன் வன்னி சென்ற பின் அரசியல் பொறுப்பாளராக இருந்த துரையுடன் இணைந்து திட்டங்களை வகுத்தோம் கருணாவின் உத்தரவிற்கு அமைய.
தேர்தல் தினத்தன்று பல சதிகளை மேற் கொள்ள வைத்தேன் கருணாவின் நிலை சிக்கலானால் இந்த சாட்டுகளை வைத்து விடுதலைப் புலிகளை ஏமாத்தலாம் என்று அதற்கு விடுதலைப்புலிகள் தலைமை நான் நினைத்தது போன்று ஏமாந்தது அதனால் தான் நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தேன்.
நான் விடுதலைப்புலிகள் தலைமைக்கு எதிராக எங்கேயாவது 2004,காலப்பகுதியில் செயல்பட்டு இருப்பதாக நிருபித்தால் நான் உடனே எனது அரசியலில் இருந்து விலகுவேன் என்பதை தெரிவிக்கிறேன்.
அப்படி விடுதலைப்புலிகளிற்கு எதிராக செயற்பட்ட ஆதாரங்களை நானே அழித்தேன் அதை மீறி யாரிடமாவது இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
மக்களையும் கட்சியையும் ஏமாற்றியதனால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ம் ஆண்டு முதல்தடவையாகவும் 2010ல் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வரை வேர் ஊன்ற நிற்கிறேன்.
2012,ம் ஆண்டு இலங்கை தமிழரசுகட்சி தேசிய மாநாடு நடத்தப்பட்ட வேளையில் ஓடி ஒளிக்கவில்லை பலர் ஓடி ஒழிப்பதற்கு நான் செய்த வேலை யாருக்குத் தெரியும்…
யாரும் எப்பொதும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் சேரலாம் வேறுகட்சிகளில் இருந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வரலாம் அவர்களை இணைப்பது கட்சி தலைமை நான் யாரையும் இணைக்க வேண்டாம் என கருதவில்லை.
அற்ப சந்தர்பவாத அரசியல் என்னிடம் இல்லை மொட்டைக் கடிதம், புனைபெயர், முகநூல் மொட்டைக் கட்டுரைகள் எழுதுவதில் மட்டக்களப்பில் என்னை மிஞ்சியவர் யார்.
என்னை மீறி வளர்பவர்களிற்கு என்ன நடந்தது என பாதிக்கப் பட்டவர்களிற்குத் தெரியும் அது மட்டுமா கட்சியை ஏமாற்றி இன்று வரை பட்டிருப்பை என் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன் இந்த தைரியம் யாரிடம் உள்ளது…
உண்மைக்கு புறம்பாக என்மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்தை நேரடியாக என்னுடன் கதைக்க முடியாத வக்கற்ற சட்டம்பி பேர்வழிகள் இவ்வாறு எழுதும் கட்டுரைக்கு பதில் தர வேண்டும் என்பதற்காக இதை எழுதியுள்ளேன்… முடிந்தால் முட்டிப் பாருங்கள்… என அரியநேந்திரன் தன் நெருங்கிய ஊடகவியலாளர் ஒருவரிடம் புலம்பித் தள்ளியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது தராக்கி சிவராம் எழுதிய கட்டுரைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஏடான பழுகாமத்தை மையப்படுத்தி வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் கருணா சார்பாக கட்டுரை எழுதிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர் அறிக்கையில் இது தொடர்பில் வாய் திறக்கவே இல்லை என்றால் இவர் எப்படியான யோக்கியவான் என நினைத்தப்பாருங்கள்…