Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுதந்திரக் கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது!

சுதந்திரக் கட்சியை எவராலும் வீழ்த்த முடியாது!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடிகளை மையப்படுத்தி எவராலும் கட்சியை பலவீனப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, கட்சியினர் அனைவரும் ஒன்றினைந்து நெருக்கடிகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியில் இன்று காணப்படுகின்ற அனைத்து நெருக்கடிகளையும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே வெற்றிக் கொள்ள வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான கடமை கூதந்திர கட்சியை பலப்படுத்துவதே ஆகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv