வடக்கில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணியாளர்களுக்கு வெகுவிரைவில் உறுதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கயந்த கருணாதிலக சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாத நிலைமையே உள்ளது.
இவற்றை கொடுக்கும் காணிகளுக்கு அரசாங்கம் பல கருத்துக்களை கூறுகின்றது.
ஆனால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள என்ன செய்யப்போகின்றது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என்றார்.
அமைச்சர் கயந்த :- இந்த மாவட்ட காணி பிரச்சினையில் ஒரு சில அமைச்சுக்கள் தொடர்புபட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்திற்கு வெகு விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.