Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஜெனி­வாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம்­ தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம்  ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்­பான பிர­தான விவாதம் 27ஆம் திகதி இடம்­பெ­றும். ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை முன்­வைப்பார். அதன்­பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் சம்­பந்­த­மான அறிக்­கையை முன்­வைக்கும். தொடர்ந்து உறுப்பு நாடுகள் இலங்கை நிலமை தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளன.

இலங்கையின் சார்பில் அயலுறவு அமைச்சர் தலைமையில் உயர் மட்ட தூதுக்குழுவினர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் அதிகாரிகளும் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv