Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கொழும்பில் பதற்றம்! விசேட அதிரடிப்படை குவிப்பு

கொழும்பில் பதற்றம்! விசேட அதிரடிப்படை குவிப்பு

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார் ஒருவர் மீது தாக்கத்தல் மேற்கொண்ட புலனாய்வு அதிகாரி பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார்.

காலை 9 மணியளவில் ஆரம்பமான விசாரணை மீண்டும் 2.15 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய முப்படைகளின் பிரதானியை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தனர்.

இதன்போது அந்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv