Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 18 தமிழக மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடற்படையினர் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இந் நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்தபோது நீதிவான் அவர்களை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரையும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv