இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு வரும் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் தேசிய மாநாட்டை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாட்டை நடத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி நாளை காலை கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும், நாளை பிற்பகல் மாட்டின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாலிபர் முன்னணியின் மத்தியசெயற்குழு கூட்டம் இடபெறவுள்ளது.
குறித்த இரண்டு கூட்டங்களிலும் கட்சியின்தேசிய மாநாட்டு முன் ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட உள்ளது,
மேலும் குறித்த கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.