சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்
பெரும்பான்மை சிங்கள மக்கள் உள்ள அரசாங்கம் ஒன்றுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
சிங்கள மக்கள் எந்த அரசியல் தரப்புடன் அதிகம் இருக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. சிங்களவர்கள் அதிகமாக உள்ள அரசாங்கம் ஒன்றுக்கு சிறுபான்மையினர் தமது ஆதரவை வழங்குவார்களாயின் அந்த அரசாங்கம் மேலும் பலம் பெரும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.




